அவசியம் இல்லாவிடினும்
அடிக்கடி செல்கிறேன்
அந்த தெருவிற்கு,
அரிதாரம் பூசி
மாறுவேடம் பூண்டு
உயர்ந்தோங்கி நிற்கும்
எங்கள் பழைய வீட்டை பார்க்க
அது இன்று சொந்தமில்லை எனினும்!!
அவசியம் இல்லாவிடினும்
அடிக்கடி செல்கிறேன்
அந்த தெருவிற்கு,
அரிதாரம் பூசி
மாறுவேடம் பூண்டு
உயர்ந்தோங்கி நிற்கும்
எங்கள் பழைய வீட்டை பார்க்க
அது இன்று சொந்தமில்லை எனினும்!!
எங்கும் சுத்தம்,
எதிலும் சுத்தம்
என இருக்கும் நான்
உன் எச்சில் முத்தத்திற்கு
காத்திருக்கிறேன்!!
வயிறு ஒட்டிப்போய்,
கூன் விழுந்த முதுகோடு வந்து
"பசிக்குதும்மா" என்ற கிழவியை விரட்டிவிட்டு
உனக்கொரு வாய்,
நிலாவில் இருக்கும் பாட்டிக்கு ஒரு வாய்
என்று குழந்தைக்கு
பால் சோறு ஊட்டிவிட்டு கொண்டிருந்தாள் அவள்.
இருபதில், உணவே விருந்தாய்
நாற்பதில், உணவே மருந்தாய்
கசக்கும் பாகற்காயும் இனிக்கிறதாம்,
இனிக்க இனிக்க சக்கரை
உடலில் கூடிப்போனதால்!
பாத்திரத்தின் ஓரத்தில் இருந்த துளி உணவினை
பசியால் வாடும் தன் பிள்ளை
கால்வயிரேனும் சாப்பிட எண்ணி
சொன்னாள்,
"நான் இன்று விரதம்" என்று!
#தாய்
உணவு உடலுக்கு தெம்பூட்ட;
அன்பு உள்ளத்திற்கு தெம்பூட்ட;
ஆரோக்கியம் என்பது உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் தான்!
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...